854 இடைநிலை ஆசிரியர்களுக்கு வெளி மாவட்டங்களில் பணி நியமன உத்தரவு
854 இடைநிலை ஆசிரியர்களுக்கு வெளி மாவட்டங்களில் பணி நியமன உத்தரவு
UPDATED : செப் 03, 2014 12:00 AM
ADDED : செப் 03, 2014 10:37 AM
அ நிறம் | அளவு
சென்னை: சொந்த மாவட்டங்களில், பணிபுரிய வாய்ப்பு கிடைக்காத 854 இடைநிலை ஆசிரியர்கள், வெளி மாவட்டங்களில் பணி நியமன உத்தரவை பெற்றனர்.
தொடக்க கல்வித் துறையில், 1,649 இடைநிலை ஆசிரியரை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள், மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கு நடந்த கலந்தாய்வில், 795 பேர் பணி நியமன உத்தரவு பெற்றனர்.
நேற்று, வெளி மாவட்டங்களில் சேர்வதற்காக கலந்தாய்வு நடந்தது. இதில், சொந்த மாவட்டங்களில் இடம் கிடைக்காத 854 பேர், வெளி மாவட்டங்களில் சேர, பணி நியமன உத்தரவுகளை பெற்றனர்.
