50 மருத்துவ இடங்களை நிரப்ப 9ம் தேதி இறுதிகட்ட கவுன்சிலிங்
50 மருத்துவ இடங்களை நிரப்ப 9ம் தேதி இறுதிகட்ட கவுன்சிலிங்
UPDATED : செப் 06, 2014 12:00 AM
ADDED : செப் 06, 2014 12:22 PM
புதுச்சேரி: புதுச்சேரி மருத்துவ கல்லுாரிகளில் காலியாக உள்ள 19 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளிட்ட 50 இடங்களை நிரப்ப, வரும் 9ம் தேதி, இறுதிகட்ட கவுன்சிலிங் நடக்கிறது.
மருத்துவ படிப்பிற்கான இறுதி கட்ட கவுன்சிலிங், புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரியில் நடக்கவுள்ளது. தனியார் மருத்துவ கல்லுாரிகளை பொறுத்தவரை 19 எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. மேலும், பல் மருத்துவம், ஆயுர்வேதம், நர்சிங் உள்ளிட்ட படிப்புகள் சேர்த்து மொத்தம் 50 இடங்கள் காலியாக உள்ளது.
காலியிட விபரம்
எம்,பி.பி.எஸ்.,: அறுபடை: பொது-1, இ.பி.சி.,-1, எஸ்.சி.,-2. மகாத்மா: பொது-2, ஓ.பி.சி,-1, பழங்குடியினர்-1. லட்சுமி நாராயணா: பொது-3, எஸ்.சி.,-1. வெங்கடேஸ்வரா: பொது-1. விநாயகாமிஷன்: பொது-3, எஸ்.சி.,-2 ஆயுர்வேதம்: ராஜிவ்காந்தி: ஏனாம் பொது-1, எம்.பி.சி.,-2.
கால்நடை அறிவியல்
ராஜிவ்காந்தி: பொது-1, எம்.பி.சி.,-1,
பல் மருத்துவம்
இந்திரா காந்தி: பொது-6, ஓ.பி.சி.,-1,மீனவர்-1, எம்.பி.சி.,-1, எஸ்.சி.,-2.
