UPDATED : செப் 06, 2014 12:00 AM
ADDED : செப் 06, 2014 02:53 PM
அ நிறம் | அளவு
பெங்களூர்: புகழ்பெற்ற பல்துறை கல்வி நிறுவனமான நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் இயக்குநராக, டாக்டர்.பல்தேவ் ராஜ் பொறுப்பேற்றுள்ளார்.
இவர், ஒரு பெயர்பெற்ற விஞ்ஞானி என்பதோடு, கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியவர்.
இவர், 970க்கும் மேற்பட்ட அகடமிக் பேப்பர்களை எழுதியுள்ளார் மற்றும் எனர்ஜி, கல்சுரல் ஹெரிடேஜ், மெடிக்கல் டெக்னாலஜிஸ், நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
மேலும், நாட்டின் வியூக மற்றும் பாதுகாப்புத் துறையில் நிலவும் பல சிக்கல்களுக்கு தீர்வுகளையும் இவர் கொடுத்துள்ளார். பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
