sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வெளிநாட்டு பல்கலைகளுடன் இணைந்து ஆய்வு படிப்பு மேற்கொள்ள ஐ.ஐ.டி., திட்டம்

/

வெளிநாட்டு பல்கலைகளுடன் இணைந்து ஆய்வு படிப்பு மேற்கொள்ள ஐ.ஐ.டி., திட்டம்

வெளிநாட்டு பல்கலைகளுடன் இணைந்து ஆய்வு படிப்பு மேற்கொள்ள ஐ.ஐ.டி., திட்டம்

வெளிநாட்டு பல்கலைகளுடன் இணைந்து ஆய்வு படிப்பு மேற்கொள்ள ஐ.ஐ.டி., திட்டம்


UPDATED : அக் 31, 2014 12:00 AM

ADDED : அக் 31, 2014 12:06 PM

Google News

UPDATED : அக் 31, 2014 12:00 AM ADDED : அக் 31, 2014 12:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடையாறு: சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்கும் மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, ஆய்வு படிப்பு மேற்கொள்ள, ஐ.ஐ.டி., திட்டமிட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.,யில், சர்வதேச மாணவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதில், ஜப்பான், ஜெர்மனி, தாய்லாந்து, பெல்ஜியம் மற்றும் இத்தாலி நாடுகளை சேர்ந்த, 60க்கும் அதிகமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு மாணவர்கள், பல்வேறு குழுக்களாக கலந்து கொண்டு மராட்டிய நடனமாடினர். மேலும், ஜப்பான், ஜெர்மனி நாடுகளின் மாணவர்கள், பாலிவுட் நடனங்கள் நிகழ்த்தினர். இந்தியாவின் பல்வேறு மாநில உடைகளை அணிந்தபடி, பேஷன் ஷோவும் நடைபெற்றது.

இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மற்றும் சர்வேதேச மாணவர்கள் அமைப்பின் டீன், டாக்டர் நாகராஜன் கூறுகையில், "ஐ.ஐ.டி.,யில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல வெளிநாட்டு பல்கலைக்கழங்களுடன் இணைந்து, இணை பிஎச்.டி., மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்" என்றார்.






      Dinamalar
      Follow us