sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

விபரங்களை உடனடியாக ஆன்-லைனில் பதிவுசெய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

/

விபரங்களை உடனடியாக ஆன்-லைனில் பதிவுசெய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

விபரங்களை உடனடியாக ஆன்-லைனில் பதிவுசெய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

விபரங்களை உடனடியாக ஆன்-லைனில் பதிவுசெய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


UPDATED : நவ 04, 2014 12:00 AM

ADDED : நவ 04, 2014 11:42 AM

Google News

UPDATED : நவ 04, 2014 12:00 AM ADDED : நவ 04, 2014 11:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விபரங்களை, உடனடியாக ஆன்-லைனில் பதிவுசெய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தனிநபர் தகவல் தொகுப்பில், பதிவுசெய்ய வழங்கப்பட்டுள்ள குறியீட்டு எண்ணை பயன்படுத்தி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் நடப்பு கல்வியாண்டில் பணியில் சேர உள்ளவர்களின் விபரங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் பதிவுசெய்ய வேண்டும்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளதை, கல்வித்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி அலுவலர்களும், பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தலைமையாசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இப்பணியில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us