sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளி வளாகத்தில் தொடரும் நாய்களின் தொல்லை

/

பள்ளி வளாகத்தில் தொடரும் நாய்களின் தொல்லை

பள்ளி வளாகத்தில் தொடரும் நாய்களின் தொல்லை

பள்ளி வளாகத்தில் தொடரும் நாய்களின் தொல்லை


UPDATED : நவ 04, 2014 12:00 AM

ADDED : நவ 04, 2014 12:08 PM

Google News

UPDATED : நவ 04, 2014 12:00 AM ADDED : நவ 04, 2014 12:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரில் உள்ள பல பள்ளி வளாகங்களில், தெரு நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மாணவர்கள் அச்சமடைகின்றனர்.

திருப்பூர் நஞ்சப்பா பள்ளி, ஜெய்வாபாய் பள்ளி, கே.எஸ்.சி., அரசு பள்ளி மற்றும் வீரபாண்டி, கருப்பகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பள்ளிகளில், தெருநாய்கள், பள்ளி வளாகங்களில் கூட்டமாக காணப்படுகின்றன. பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் பகல் முழுவதும் பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிகின்றன. மாணவ, மாணவியர் அமரும் மரத்தடி நிழலில், விளையாடும் பகுதிகளில் நாய்கள் படுத்துக் கொள்கின்றன. மதிய உணவு சாப்பிடும் இடங்களிலும் காணப்படுகின்றன.

இதனால், மாணவர்கள் அச்சமடைகின்றனர். பள்ளி வளாகத்தில் நாய்கள் மலம், சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்துவதால் மாணவ, மாணவியர் அருவருப்பு அடைகின்றனர்; சில நேரங்களில், கூட்டமாக குரைத்துக் கொண்டு கடித்து குதறிக் கொள்வதால், வகுப்பறையில் பாடம் நடத்துவது பாதிக்கிறது.

ஆசிரியர்கள் கூறுகையில், "பல மாதங்களாக, பள்ளிகளில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. நோய்வாய்ப்பட்ட நாய்களும் உள்ளதால், அச்சமாக இருக்கிறது. நாய்களை பிடித்து அப்புறப்படுத்த, மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்து விட்டோம், நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர்" என்றனர்.






      Dinamalar
      Follow us