கால்நடைத்துறையில் பணிபுரிய 7 பேருக்கு பணி நியமன ஆணை
கால்நடைத்துறையில் பணிபுரிய 7 பேருக்கு பணி நியமன ஆணை
UPDATED : நவ 06, 2014 12:00 AM
ADDED : நவ 06, 2014 12:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கால்நடைத்துறையில் பணிபுரிய ஏழு பேருக்கு, ஐகோர்ட் உத்தரவுபடி, முதல்வர் ரங்கசாமி பணி நியமன ஆணை வழங்கினார்.
புதுச்சேரி கால்நடை துறையில் கடந்த 2010ம் ஆண் கால்நடை பணியாளர்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
தற்போது காலியாக இருக்கும் 7 இடங்களுக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவுபடி, காத்திருந்தோர் பட்டியலில் இருந்த 7 பேருக்கு, பணி நியமன ஆணையை முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார். சட்டசபை முதல்வர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கால்நடைத்துறை இயக்குனர் பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

