sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பணி வரன்முறை செய்யாததால் 1,200 கம்ப்யூட்டர் ஆசிரியர் பயிற்றுனர்கள் தவிப்பு

/

பணி வரன்முறை செய்யாததால் 1,200 கம்ப்யூட்டர் ஆசிரியர் பயிற்றுனர்கள் தவிப்பு

பணி வரன்முறை செய்யாததால் 1,200 கம்ப்யூட்டர் ஆசிரியர் பயிற்றுனர்கள் தவிப்பு

பணி வரன்முறை செய்யாததால் 1,200 கம்ப்யூட்டர் ஆசிரியர் பயிற்றுனர்கள் தவிப்பு


UPDATED : நவ 12, 2014 12:00 AM

ADDED : நவ 12, 2014 12:29 PM

Google News

UPDATED : நவ 12, 2014 12:00 AM ADDED : நவ 12, 2014 12:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ஆறு ஆண்டுகளாக பணி வரன்முறை செய்யாததால் பதவிஉயர்வு, ஊக்க ஊதியமின்றி 1,200 கம்ப்யூட்டர் ஆசிரியர் பயிற்றுனர்கள் தவித்து வருகின்றனர்.

அரசு மேல்நிலை பள்ளிகளில் 1996ல் தொகுப்பூதியத்தில் 1880 கம்ப்யூட்டர் ஆசிரிய பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டனர். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2008ல் தேர்வு நடத்தப்பட்டு 1,060 பேர் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 140 பேர் மட்டும் தேர்ச்சி பெற்று பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். தேர்ச்சி பெறாத 656 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

பணிநிரந்தரம் செய்யப்பட்டவர்கள் ஆறு ஆண்டுகளாகியும் இதுவரை பணி வரன்முறை செய்யப்படவில்லை. இதனால் அவர்களுக்கு பதவி உயர்வு, ஊக்க ஊதியம் போன்ற பணப்பலன் கிடைக்கவில்லை. மற்ற ஆசிரியர்களை போல் இடமாறுதலும் வழங்கப்படவில்லை. இதனால் 1,200 பேரும் தவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு மேல்நிலை முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் அருள்ஜோதி கூறியதாவது: ஆதிதிராவிடர் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 50 கம்ப்யூட்டர் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு ஆக.,27 ல் கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் வழங்கப்பட்டது. முதுகலை பட்டம் முடித்தும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது காலியாக உள்ள 656 பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட உள்ளன. அதற்குள் எங்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும். பணி வரன்முறைப்படுத்த வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us