தேர்வுக்கு பயந்து நான்கு மாணவர்கள் வீட்டை விட்டு ஓட்டம்
தேர்வுக்கு பயந்து நான்கு மாணவர்கள் வீட்டை விட்டு ஓட்டம்
UPDATED : பிப் 23, 2015 12:00 AM
ADDED : பிப் 23, 2015 12:34 PM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி: தேர்வு பயத்தால், வீட்டை விட்டு வெளியேறி வேலை தேடிய, 10ம் வகுப்பு மாணவியர், நான்கு பேர் மீட்கப்பட்டனர்.
திருநெல்வேலி, விக்கிரமசிங்கபுரம், தனியார் பள்ளி 10ம் வகுப்பு மாணவியர், நான்கு பேர், பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து விடுவதாக பயந்தனர். எனவே, வீட்டை விட்டு வெளியேறி, வேலை தேடி புறப்பட்டனர்.
நாகர்கோவிலில் ஒரு பேன்சி கடையில் வேலை கேட்டுள்ளனர். கடை உரிமையாளர், மாணவியர் நிலை அறிந்து, பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார், நாகர்கோவிலில், நான்கு மாணவியரையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
