போலியோ ஒழிப்பு திட்டத்துக்கு நிதி திரட்டிய பள்ளி மாணவ, மாணவியர்
போலியோ ஒழிப்பு திட்டத்துக்கு நிதி திரட்டிய பள்ளி மாணவ, மாணவியர்
UPDATED : பிப் 25, 2015 12:00 AM
ADDED : பிப் 25, 2015 10:55 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: போலியோ ஒழிப்பு திட்டத்துக்கு நிதி திரட்டிய, ஜெம் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவியர் கவுரவிக்கப்பட்டனர்.
குழந்தைகளை தாக்கும் போலியோவை முற்றிலும் ஒழிக்கும் வகையில், பல்லடம் ஜெம் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உதவியுடன் நிதி திரட்டினர். திரட்டப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை, ரோட்டரி கிளப் உறுப்பினர்களிடம் வழங்கினர். இச்சேவையை பாராட்டி, கவுரவிக்கும் வகையில், ரோட்டரி கவர்னர் நம்பியார், பல்லடம் ரெயின்போ கிளப் தலைவர் பிரகாஷ், பல்லடம் ரோட்டரி கிளப் தலைவர் நடராஜ் உள்ளிட்டோர், ஜெம் இன்டர்நேஷனல் பள்ளிக்குச் சென்று, மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.
