UPDATED : செப் 09, 2015 12:00 AM
ADDED : செப் 09, 2015 12:20 PM
அ நிறம் | அளவு
மத்திய அரசு நிறுவனமான, பி.எஸ்.என்.எல் மற்றும் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக்கழகம் இணைந்து வேலையில்லா இளைஞர்களுக்காக பல்வேறு தொழில் பயிற்சிகளை அளித்து வருகிறது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ராஜீவ்காந்தி மெமோரியல் டெலிகாம் டிரைனிங் சென்டரில் 75 இளைஞர்களுக்கு பி.எஸ்.என்.எல் சர்ட்டிபைடு நெட்வொர்க் இன்ஜினியர் பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியை ஊரகத் தொழில் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு.பி. மோகன் அவர்கள் இன்று( செப்..,9 ) நேரில் இளைஞர்களிடம் பயிற்சி பற்றி ஆய்வு செய்தார். அவருடன் திரு. சி. சமயமூர்த்தி IAS இயக்குனர் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, திரு வி. வேலப்பன், பயிற்சி நிலைய முதல்வர், ஆகியோர் பங்கேற்றனர்.
