UPDATED : ஜன 02, 2016 12:00 AM
ADDED : ஜன 02, 2016 11:25 AM
செக்கானுாரணி
:
செக்கானுாரணியில் மாநில அளவிலான என்.சி.சி., சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 2வது தமிழ்நாடு தேசிய மாணவர் படைப்பிரிவு(மாணவியர்), 5வது சிக்னல் என்.சி.சி., படை பிரிவுகள் சார்பில் ஏ, பி, சி சான்றிதழ் தேர்வுக்கான மாநில அளவிலான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட பள்ளி, கல்லுாரி
மாணவர்கள் 500 பேர், என்.சி.சி., இணை அலுவலர்கள் 6 பேர் பங்கேற்றனர். அணிவகுப்பு, துப்பாக்கி சுடுதல், வரைபடம் அறிதல், யுக்திகள் கைவினை, துாரம் ஆராய்தல், சமிக்ஞைகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தியானம், தற்காப்புக்கலை, மருத்துவ ஆலோசனையும் நடந்தது.பல்வேறு
போட்டிகளில் சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லுாரி வென்றது. பரிசளிப்பு விழாவில்
தலைமை ஆசிரியர்கள் கணபதி சுப்பிரமணியன், சாந்தி முன்னிலை
வகித்தனர். கர்னல் கஜேந்திரசிங் பரிசு வழங்கினார்.
