UPDATED : ஜன 13, 2016 12:00 AM
ADDED : ஜன 13, 2016 11:29 AM
அ நிறம் | அளவு
கோவை
: கோவை அரசு
கலைக் கல்லுாரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் பிற துறை மாணவர்கள் சார்பில்
பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
காலை, 10:00 மணி முதலே, மண் பானை, கரும்பு, பூளை பூ உள்ளிட்டவற்றை வைத்து பாரம்பரிய முறைப்படி மாணவர்கள் பொங்கல் வைத்தனர்.கல்லுாரி முதல்வர் ஜெயலட்சுமி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரமோத்குமார், நாட்டு நலப்பணி திட்ட(அலகு- 3) அலுவலர் மகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இனிப்பு, கரும்பு, பொங்கல் ஆகியன அனைவருக்கும் வழங்கப்பட்டன. இறுதியில் ஜமாப் அடிக்க மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் முதல்வர் அறையை மாணவர்கள் திடீரென முற்றுகையிட்டனர்.
