UPDATED : ஜூன் 25, 2009 12:00 AM
ADDED : ஜூன் 26, 2009 12:23 PM
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பின்னர் மாணவ, மாணவியர் ஒரு சிறப்பு பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு பொதுத்தேர்வு நடத்தி, மாணவர்கள் பெறும் மதிப்பெண் சதவீத அடிப்படையில் அவர்களை சிறப்பு பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கு பதிலாக வேறு முறை பின்பற்றலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.
கல்விமுறை என்பது அறிவை வளர்ப்பதாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் அமைய வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கைவிடுவது குறித்து பள்ளிகளுடனும், பெற்றோருடனும் தீவிர ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதால் மாணவ, மாணவியர் மன நெருக்கடிக்கு ஆளாவது தவிர்க்கப்படும் என தெரிவித்துள்ளதோடு, படிப்பை ஆர்வத்துடனும், விருப்பத்துடனும் தொடர வழி வகுக்கும் என யோசனை கூறியுள்ளார்.