தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்களே வராத பள்ளிகள்: கேள்விக்குறியாகும் கல்வி

ஆசிரியர்களே வராத பள்ளிகள்: கேள்விக்குறியாகும் கல்வி

ஆசிரியர்களே வராத பள்ளிகள்: கேள்விக்குறியாகும் கல்வி


UPDATED : அக் 12, 2009 12:00 AM

ADDED : அக் 12, 2009 06:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2009 12:00 AM ADDED : அக் 12, 2009 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு






ஆத்தூர்:

ஆத்தூரில் அரசு உறைவிடப் பள்ளிகளில் ஆய்வு நடத்திய வருவாய்த்துறையினர், ஆசிரியரே இல்லாத நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.






சேலம் மாவட்டம், ஆத்தூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பெரிய கல்வராயன் மலையில் கீழ்நாடு கிராமம் உள்ளது.  இங்குள்ள நாகலூர் அரசு உறைவிடப் பள்ளியில், தாசில்தார் ஜெயபால் உட்பட அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர்.






55 மாணவர்களுக்கு பதிலாக, ஏழு மாணவர்கள் மட்டுமே இருந்தனர். தலைமை ஆசிரியர் பிரபுதாஸ், சமையலர் பெருமாள் உள்ளிட்டோர் யாரும் பணியில் இல்லை. மாணவர்களே தங்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தனர். குன்னூர் மலைக் கிராமத்திலுள்ள அரசு உறைவிட பள்ளியில் 100 மாணவர்களுக்கு, 75 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். தலைமை ஆசிரியர் செல்வராஜ், 15 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்கு வரவில்லை என்பதும் தெரியவந்தது.






ஒரு ஆசிரியர், சமையலர் மட்டுமே இருந்துள்ளனர். சத்துணவு மையத்தில், தக்காளி, காய்கறி தவிர, மளிகைப் பொருட்கள் எதுவும் இல்லை. இது தொடர்பாக வருவாய்த்துறையினர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமையலர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.






தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரிய மாநில கமிட்டி உறுப்பினர் பழனிசாமி கூறியதாவது:
மலைகிராம பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மாதத்தில் இரண்டு முறை மட்டுமே வருகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ள மலைவாழ் சமுதாயத்தினருக்கு மாதம் 1,000 ரூபாய் சம்பளம் கொடுத்துவிட்டு, பள்ளிக்கு ஆசிரியர்கள் வருவதில்லை.






பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து விடுகின்றனர். ஆசிரியர்களது வருகை பதிவேட்டிலும் கையெழுத்து இல்லை. இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டு மாவட்ட நிர்வாகத்தை ஏமாற்றி, சம்பளம் பெற்று வரும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us