UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM
ADDED : ஜூன் 16, 2023 05:48 PM
கேரள மாநிலம், பாலக்காட்டில் மா.கம்யூ., கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரகாஷ் காரத், அவர் படித்த வடத்தந்தறை நாயர் அரசு நடுநிலை பள்ளிக்கு திடீர் விசிட் செய்தார். கடந்த 1953ல் 8 மாதம் ஒன்றாம் வகுப்பில் இங்கு படித்துள்ளார். ஒன்றாம் வகுப்பு முதல் அறை, விளையாடிய இடங்களை கண்டு பழைய நினைவுகளை நினைவுபடுத்தி மகிழ்ச்சி அடைந்தார்.பள்ளியில் தற்போது ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுடன், குழந்தை போன்று அமர்ந்து மகிழ்ந்தார். பிரகாஷ் காரத், கடந்த 1948ல் பர்மாவில் (இன்றைய மியான்மர்) பிறந்தவர். அவரது தந்தை பத்மநாபன் நாயர், பாலக்காடு மாவட்டம் எலப்புள்ளி காரத் சுண்டுள்ளி குடும்பத்தை சேர்ந்தவர். பிரிட்டீஷ் ரயில்வே ஊழியராக இருந்தார். அவரது தாய் ராதாவின் வீடு கேரள வடத்தந்தறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
