புதுப்பிக்கப்பட்ட நுாலகம் மாணவ - மாணவியர் மகிழ்ச்சி
புதுப்பிக்கப்பட்ட நுாலகம் மாணவ - மாணவியர் மகிழ்ச்சி
UPDATED : செப் 13, 2023 12:00 AM
ADDED : செப் 13, 2023 05:01 PM
செம்மஞ்சேரி:
செம்மஞ்சேரி, அரசு மேல்நிலைப்பள்ளியில் 680 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இங்குள்ள, நுாலகம் போதிய பராமரிப்பின்றி, புத்தகங்கள் இல்லாமலும் இருந்தது.இதனால், மாணவர்களிடம் புத்தகம் வாசிப்பு பழக்கம் குறைந்தது. இந்நிலையில், ஆக்ஸன் எயிட் என்ற அமைப்பு, நுாலகத்தை புதுப்பித்து வழங்க முன்வந்தது. மேஜை, இருக்கை, புத்தக அலமாரி உள்ளிட்ட வசதிகளுடன், 200 சிறுவர் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இரு தினங்களுக்கு முன், இந்நுாலகம் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாணவ - மாணவியர் குறிப்பிட்ட நேரம் ஆர்வமுடன் புத்தகங்கள் வாசிக்கின்றனர்.வாசிப்பு பழக்கம், அவர்கள் படிக்கும் பாடத்திற்கு உதவுவதுடன், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ கற்றுக்கொடுக்கும் என, ஆசிரியர்கள் கூறினர். விரைவில், &'ஸ்டெம் லேப், அறிவியல் லேப்&' வசதிகள் செய்யப்பட உள்ளன.
