UPDATED : அக் 08, 2023 12:00 AM
ADDED : அக் 08, 2023 08:49 AM
ஓமலுார்:
சேலம், கருப்பூரில் தமிழ் கனவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் அலர்மேலு மங்கை தலைமை வகித்து பேசுகையில், கல்வி, சமூக நீதி, தொழில் வளர்ச்சி ஆகிய அனைத்திலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றார்.கனவு மெய்ப்பட வேண்டும் தலைப்பில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேசுகையில் எந்த புத்தகத்தில் உள்ள சொல், நம் வாழ்க்கையை மாற்றும் என்பது தெரியாது. எவ்வளவு விரைவாக அந்த சொல் நம்மை வந்து சேர்கின்றதோ அவ்வளவு விரைவாக நம் வாழ்க்கை மாறுகிறது. மனித வளர்ச்சிக்கு ஏற்ப மனித நேயத்தை வளர்ப்பது தமிழ்கனவு நோக்கங்களில் ஒன்று என்றார்.தொடர்ந்து சிறப்பாக கருத்துரையாடிய மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ் கனவு மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் அபிநயா, மாவட்ட சமூக நல அலுவலர் ஜெனிபர் சோனியா ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.
