தேசிய அளவிலான நீச்சல் போட்டி திருவள்ளூர் பள்ளி மாணவன் தேர்வு
தேசிய அளவிலான நீச்சல் போட்டி திருவள்ளூர் பள்ளி மாணவன் தேர்வு
UPDATED : அக் 10, 2023 12:00 AM
ADDED : அக் 10, 2023 05:26 PM
திருவள்ளூர்:
புதுடெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு திருவள்ளூர் பள்ளி மாணவன் தேர்வவாகி உள்ளார்.திருவள்ளூர் நகராட்சி, ராஜாஜி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் எஸ்.சஞ்சய்,13. இவருக்கு மாவட்ட விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சியாளர் லோகேஷ்குமார் பயிற்சி அளித்து வருகிறார்.மாணவன் சஞ்சய் குஜராத்தில் நடந்த நீச்சல் போட்டியில் வெங்கலம் பரிசு பெற்றுள்ளார். மேலும், திருநெல்வேலியில் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் 7 ம் தேதி நடந்த தேசிய நீச்சல் போட்டியில், 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் மற்றும் 14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய அளவில் புதுடில்லியில் நடைபெற உள்ள போட்டியில் சஞ்சய் பங்கேற்கிறார். இவரை பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டினர்.
