கத்தாரில் நடந்த செஸ் போட்டி காரைக்குடி மாணவர் சாதனை
கத்தாரில் நடந்த செஸ் போட்டி காரைக்குடி மாணவர் சாதனை
UPDATED : அக் 16, 2023 12:00 AM
ADDED : அக் 16, 2023 09:45 AM
காரைக்குடி:
கத்தாரில் நடந்த மாஸ்டர் செஸ் போட்டியில் உலக நடப்பு சாம்பியன் கார்ல்ஸனை, காரைக்குடி வித்யாகிரி பள்ளி மாணவர் பிரனேஷ் டிரா செய்து சாதித்துள்ளார்.கத்தாரில் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டி அக்.10 முதல் 20 வரை நடக்கிறது. இதில் உலகின் சிறந்த முன்னணி செஸ் வீரர்கள் 160 பேர் பங்கேற்றனர். இப்போட்டி 9 சுற்றுக்களாக நடக்கிறது. அக்.,14ல் நடந்த 4வது சுற்றில் உலக நடப்பு சாம்பியன் மற்றும் சூப்பர் கிராண்ட் மாஸ்டரான நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்ஸனுடன் காரைக்குடி வித்யா கிரி பள்ளி மாணவர் கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ் விளையாடினர்.இதில் கிராண்ட் மாஸ்டர் பிரனேஷின் 53வது நகர்த்தலின் போது போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டி தொடர்ந்து 4:30 மணி நேரம் நடந்தும் உலகின் முதல் நிலை வீரருக்கு இணையாக கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ் விளையாடினார். மாணவரை பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
