UPDATED : அக் 18, 2023 12:00 AM
ADDED : அக் 18, 2023 04:45 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில், சி.எஸ்.எம்., மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இதில், 8ம் வகுப்பு படித்து வரும் மாணவர் காவல் படையைச் சேர்ந்த 44 மாணவ - மாணவியர் நேற்று, மகளிர் காவல் நிலையம் மற்றும் சிவ காஞ்சி காவல் நிலையம் சென்றனர். அங்கு காவலர்களின் பணிகள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர்.பள்ளி தலைமை ஆசிரியர் கமலகண்ணன் அனுமதி பெற்று ஆசிரியர் சுமித்ரா மற்றும் பூவரசு ஆகியோர் அவர்களை அழைத்து சென்றனர். காவலர் சீருடை அணிந்து சென்ற மாணவர்களை மகளிர் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் வரவேற்றார். காவலர் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.
