9 ஆண்டுகளில் 61.9 லட்சம் வேலை வாய்ப்புகள்: மத்திய அமைச்சர்
9 ஆண்டுகளில் 61.9 லட்சம் வேலை வாய்ப்புகள்: மத்திய அமைச்சர்
UPDATED : அக் 18, 2023 12:00 AM
ADDED : அக் 18, 2023 07:51 PM
நிகழ்ச்சியை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா தொடங்கி வைத்து பேசியதாவது:
இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளை பகிர்ந்து கொள்ளும் பொதுவான வாய்ப்புகள் மற்றும் பொதுவான சவால்களுக்கு உத்திரீதியிலான ஒருங்கிணைப்பு வேண்டும். அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் பிரச்சனைகளை ஒன்றாகத் தீர்ப்பதற்குமான பொறுமை வேண்டும். அப்போதுதான் இந்தப் பிராந்தியத்தை அனைத்து உயிரினங்களுக்கும் பொருத்தமான வாழ்விடமாக மாற்ற முடியும்.கடந்த 9 ஆண்டுகளில், மீன் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன், தொழில்நுட்ப உட்செலுத்துதல், உள்கட்டமைப்பை நவீனப்படுத்துதல், தொழில்முனைவோர் மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சி போன்ற துறைகளில் மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் ஏற்படுத்தியுள்ளது.2022-23 ஆம் ஆண்டில் ரூ.63,969 கோடி (8.09 பில்லியன் அமெரிக்க டாலர்) ஏற்றுமதியுடன் கடந்த ஒன்பது ஆண்டுகளில் கடல் உணவு ஏற்றுமதி இரு மடங்காக அதிகரித்துள்ளது. இறால் ஏற்றுமதியும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்து. 2022-23 ஆம் ஆண்டில் ரூ.43,135 கோடியை (5.48 பில்லியன் அமெரிக்க டாலர்) எட்டியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 61.9 லட்சம் வேலை வாய்ப்புகள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.உலக மீன்வள தினத்தை முன்னிட்டு 2023 நவம்பர் 21 முதல் 22 வரை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் முதல் உலக மீன்வள மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மத்திய அமைச்சர் அழைப்பு விடுத்தார். இம்மாநாட்டில், 18 நாடுகளை சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ்லிகி மற்றும் மத்திய அரசின் மீன்வளத் துறை இணைச் செயலாளர் திருமதி நீது பிரசாத், இந்தியாவிற்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி டாக்டர் டகாயுகி ஹகிவாரா, மூத்த மீன்வள அதிகாரி எப்.ஏ.ஓ டாக்டர் பியரோமண்ணி மற்றும் பிராந்திய மீன்வள அமைப்புகள் செயலக வலையமைப்பின் தலைவர் டாக்டர் டேரியஸ் காம்ப்பெல் மற்றும் பி.ஓ.பி.பி-ஐ.ஜி.ஓவின் இயக்குநர் டாக்டர் பி.கிருஷ்ணன், ஐ.சி.ஏ.ஆரின் துணை இயக்குநர் ஜெனரல் (மீன்வளம்) டாக்டர் ஜே.கே. தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், டாக்டர் எல்.நரசிம்ம மூர்த்தி மற்றும் மத்திய அரசின் மீன்வளத் துறை, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
