இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிக மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கை
இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிக மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கை
UPDATED : அக் 23, 2023 12:00 AM
ADDED : அக் 23, 2023 07:56 AM
ஒட்டன்சத்திரம்:
இந்தியாவிலே அதிக மாணவர்கள் உயர்கல்வி படித்தது தமிழ்நாட்டில்தான், என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்தவட்டார அளவிலான கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய அவர் பேசியதாவது:
கே.ஆர்.அரசு பள்ளியில் 30 வகுப்பறைகள், வடகாடு ஊராட்சி பரப்பலாறு பகுதியில் 23 வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் தேவையான பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டடங்கள் புதிதாக கட்டித் தரப்படும், என்றார்.வேலுச்சாமி எம்.பி., ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார் முத்துசாமி, நகராட்சி தலைவர் திருமலைசாமி துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் மீனா, ஒன்றிய தலைவர் அய்யம்மாள், துணைத் தலைவர் காயத்ரி தேவி, மாவட்ட திட்ட குழு உறுப்பினர் கண்ணன், வட்டார கல்வி அலுவலர்கள் குகப்பிரியா, கிருஷ்ணமூர்த்தி, தலைமை ஆசிரியை மணிமொழி, வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் முனித்துறை, ஒன்றிய செயலாளர் தர்மராஜன்பங்கேற்றனர்.
