UPDATED : அக் 26, 2023 12:00 AM
ADDED : அக் 26, 2023 10:13 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்:
பெரியகுளம் பிரம்மஞானமந்திரம் நடுநிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் நவராத்திரி இலக்கிய விழா 10 நாட்கள் நடந்தது.தினமும் புலவர்கள்,தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள் பேசினர். நிறைவு நாளில் ஒருவருடைய முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்வது படிப்பறிவா, பட்டறிவா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடுவர் சாலமன் பாப்பையா தலைமையில் நடந்தது.படிப்பறிவே என்ற தலைப்பில் பேராசியை ரேவதி சுப்புலட்சுமி, பேச்சாளர் கவிதாஜவஹர், பட்டறிவே என்ற தலைப்பில் பேச்சாளர்கள் ராஜ்குமார், ராஜா பேசினர். பட்டறிவு வேண்டுமானால் தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், மகாகவி பாரதியார் நூல்களை படிக்க, படிக்க அறிவு விசாலமாகும் என நடுவர் தீர்ப்பளித்தார்.
