UPDATED : நவ 25, 2023 12:00 AM
ADDED : நவ 25, 2023 10:30 AM
சென்னை:
இந்திய வானிலை ஆய்வு துறையின் 150ம் ஆண்டு விழாவுக்கு கொண்டாட்ட பாடல் உருவாக்கும் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்திய வானிலை ஆய்வு துறை 1875ல் உருவானது. நாட்டின் மிகவும் பழமையான அரசு துறையாகவும் உலகில் பழமையான ஆராய்ச்சி துறையாகவும் செயல்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு துறையின் 150ம் ஆண்டு விழா 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு போட்டிகள் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 150ம் ஆண்டை குறிப்பிடும் சிறப்பு இலச்சினையை உருவாக்க ஏற்கனவே போட்டி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதிதாக கொண்டாட்ட பாடல் எழுதி உருவாக்கும் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் வரும் 30ம் தேதிக்குள் https://www.mygov.in/task/compose-theme-song-imd/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
