UPDATED : நவ 27, 2023 12:00 AM
ADDED : நவ 27, 2023 09:48 AM
அ நிறம் | அளவு
கோவை:
அரசுப்பள்ளிகளில் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களை கவுரவிக்க, மத்திய, மாநில அரசு சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.இதில், பணி அனுபவம் 15 ஆண்டுகளாக குறிப்பிடப்பட்டுள்ளதால், இளம் ஆசிரியர்களை ஊக்குவிக்க, கனவு ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டது. இப்பட்டியலில், மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் சக்திவேல், ஆசிரியை மேரிதிவ்யா, ஷாஜகான் நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை ஆக்னஸ் ஸ்டெல்லா, ஒக்கிலியர்காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ராதா மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியம், தாசநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை சரவணசெல்வி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
