UPDATED : டிச 09, 2023 12:00 AM
ADDED : டிச 09, 2023 10:40 AM
அ நிறம் | அளவு
சென்னை:
வட்டார கல்வி அதிகாரி பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 14ம் தேதி நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி துறையில், பி.இ.ஓ., என்ற, வட்டார கல்வி அதிகாரி பதவியில், 33 காலியிடங்களை நிரப்ப, கடந்த செப்டம்பரில் தேர்வு முடிந்தது. இதற்கான முடிவுகள் கடந்த மாதம், 9ம் தேதி வெளியாகின.தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 4ம் தேதி நடக்க இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு, மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், வரும், 14ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்; ஏற்கனவே வழங்கிய அழைப்பு கடிதத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
