UPDATED : டிச 10, 2023 12:00 AM
ADDED : டிச 10, 2023 11:31 AM
கோவை:
காருண்யா தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், கணினி பார்வை மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் என்ற தலைப்பில், சர்வதேச மாநாடு நடந்தது.இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த தீபக் மிஸ்ரா, லக்சம்பர்க் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் இனெஸ் சிஹி ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர். கணினி பார்வை மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் தொழில்நுட்பங்களில், சமீபத்திய முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் வகையில், உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் ஒன்றாக மாநாட்டில் இணைக்கப்பட்டனர்.வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலையை சேர்ந்த அனஸ்டாசியா ஏஞ்சலோபவுலோ, உல்ஸ்டர் பல்கலையை சேர்ந்த கிரிஜேஷ் பிரசாத், காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்லுாரியின் துணைவேந்தர் பிரின்ஸ் அருள்ராஜ் மற்றும் சர்வதேச பல்கலைகளிலிருந்து பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
