UPDATED : டிச 10, 2023 12:00 AM
ADDED : டிச 10, 2023 11:30 AM
கோவை:
இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி ஆகியவை, மலேசியா, டெய்லர் பல்கலையுடன் இணைந்து, சர்வதேச கருத்தரங்கை நடத்தியது.டெய்லர் பல்கலையில், நிலைத்தன்மைக்கான பொறியியல் அமைப்புகளை மாற்றுவது என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், 750க்கும் மேற்பட்ட கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இந்துஸ்தான் பல்கலை மற்றும் மலேசியாவின் மல்டிமீடியா பல்கலை, ஏ.ஐ. எம்.எஸ்.டி., பல்கலை மற்றும் சைபர்ஜெயா பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தலைமை கல்வி அதிகாரி கருணாகரன், இந்துஸ்தான் கல்லுாரி முதல்வர்கள் ஜெயா, நடராஜன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரசுவதி, இணை செயலாளர் பிரியா ஆகியோர், நிதியுதவி வழங்கி ஊக்கப்படுத்தினர்.
