UPDATED : டிச 10, 2023 12:00 AM
ADDED : டிச 10, 2023 11:28 AM
அ நிறம் | அளவு
கோவை:
ஊர்க்காவல் படைக்கு நடந்த ஆட்கள் தேர்வில், 48 பேர் பங்கேற்றனர்.கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில், மாநகர ஊர்க்காவல் படையில் சேர ஆட்கள் தேர்வு நடைபெற்றது. 26 காலிப்பணியிடங்களுக்கு ஒரு திருநங்கை, 43 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம், 48 பேர் பங்கேற்றனர். ஆண்களுக்கு, 100 மீ., ஓட்டமும், பெண்களுக்கு, 50 மீ., ஓட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து சான்றிதழ், உயரம், எடை ஆகியவை சரிபார்க்கப்பட்டது. தேர்வை, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து கூறுகையில், ஊர்க்காவல் படை பணி செய்வதன் வாயிலாக, போலீஸ் தேர்வு நடைபெறும் போது, போலீஸ் பணியில் சேர ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஊர்க்காவல் படையினர் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும், என்றார்.
