UPDATED : டிச 11, 2023 12:00 AM
ADDED : டிச 11, 2023 10:35 AM
அ நிறம் | அளவு
சென்னை:
சென்னை மாவட்டத்தில், மிக்ஜாம் புயலால், பல வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதில் ஆதார், ரேஷன் கார்டு, பள்ளி, கல்லுாரி சான்றிதழ்கள் சேதமடைந்து உள்ளன.இந்த சான்றிதழ்களை கட்டணமில்லாமல் வழங்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில், 46 இடங்களில், நாளை முதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை முகாம் நடைபெறும். மாநகராட்சி வார்டு வாரியாக, அந்தந்த பகுதி அலுவலகங்களில் முகாம் நடைபெறும் என, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
