ஆங்கிலத்தைவிட தமிழ் மொழியே சிறந்தது: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
ஆங்கிலத்தைவிட தமிழ் மொழியே சிறந்தது: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
UPDATED : டிச 13, 2023 12:00 AM
ADDED : டிச 13, 2023 09:38 AM
அ நிறம் | அளவு
சென்னை:
அறிவியல் சொற்றொடரிலும், இலக்கண வளத்திலும் ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழே சிறந்தது என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.மேலும், அவர் கூறியிருப்பதாவது:
காலனி ஆதிக்கம் உள்ளூர் மொழிகளை அடிமை மொழி எனக் கூறி அறிவியலை பயிற்றுவிக்கும் விதத்தில் இந்தியாவில் ஆங்கிலம் திணிக்கப்பட்டது. அறிவியல் சொற்றொடரிலும், இலக்கண வளத்திலும் ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழே சிறந்தது. திருவள்ளுவருடன் ஷேக்ஸ்பியரை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். 20 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக உருவாக இளைஞர்கள் பங்கெடுக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
