UPDATED : டிச 19, 2023 12:00 AM
ADDED : டிச 19, 2023 10:24 AM
அ நிறம் | அளவு
திருப்போரூர்:
சோழிங்கநல்லுார் அடுத்த மேடவாக்கத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் இப்பகுதி வியாபாரிகள் சங்க தலைவராக இருந்தார். இவரின் மனைவி தனபாக்கியம்.இவர்கள் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை விற்று, அந்த பணத்தை தன் மனைவி தனபாக்கியம் பெயரில், மாம்பாக்கம், திருப்போரூர், பள்ளிக்கரணை, நெம்மேலி, மாமல்லபுரம், ஒரகடம், மானாமதி, சிறுதாவூர், காயரம்பேடு உள்ளிட்ட பள்ளிகளை தரம் உயர்த்த நிதி வழங்கினர்.இந்நிலையில், நேற்று முன்தினம் தனபாக்கியம், 85, இயற்கை எய்தினார். காயார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவரும், காயார் கிராம வனக்குழு தலைவருமான மோகனராமன் மற்றும் கல்வி ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள் அஞ்சலி செலுத்தினர்.
