UPDATED : டிச 21, 2023 12:00 AM
ADDED : டிச 21, 2023 03:19 PM
சென்னை:
இந்த ஆண்டு, நவம்பரில் அறிவித்திருக்கப்பட வேண்டிய குரூப் - 4 தேர்வு பட்டியல், ஜனவரியில் அறிவிக்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.அரசு துறைகளில் காலியாக உள்ள அலுவலர் பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பப்படுகின்றன.இதன்படி, குரூப் - 4 பதவிகளுக்கான தேர்வு, கடந்த மாதம் அறிவிக்கப்பட்டு, வரும் பிப்ரவரியில் தேர்வை நடத்துவதாக, டி.என்.பி.எஸ்.சி., ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், டிசம்பர் ஆகியும், தேர்வை அறிவிக்கவில்லை.இதுகுறித்து நம் நாளிதழில், இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. இதையடுத்து, குரூப் - 4 தேர்வு அறிவிப்பு, ஜனவரியில் வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. மேலும், 2024ம் ஆண்டுக்கான உத்தேச தேர்வு அட்டவணையும் நேற்று வெளியிட்டுள்ளது.
