UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 10:47 AM
கோவை:
பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியில் பயிலும் பெண்கள், சிறப்பு தொழில் நுட்ப அறிவு பெற்று பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், எல்.ஜி.,நிறுவனத்துடன் இணைந்து, கல்லுாரி வளாகத்தில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தை, கடந்த ஆண்டுதுவங்கினர்.ஜி.ஆர்.ஜி., எல்.ஜி., டிஜிட்டல் இன்னவேஷன் டோஜோ கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதலாம் ஆண்டு விழா, ஜி.ஆர்.ஜி., குழும தலைவர் நந்தினி தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, எல்.ஜி., எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்தின்நிர்வாக இயக்குனர் ஜெய்ராம் வரதராஜ் பேசுகையில், மாணவியர் கல்லுாரிகளில் பயிலும் போதே, தொழில்துறையினருடன் இணைந்து பணியாற்றி, வர்த்தகம் தொடர்பானஅனுபவங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். வேகமாக மாறி வரும் உலகில் புதிய யுக்திகள், மாற்றி யோசித்தல் போன்ற திறன்களே வெற்றியை தரும் என்றார்.
