ஆச்சாரியா பொறியியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு நேர்காணல் முகாம்
ஆச்சாரியா பொறியியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு நேர்காணல் முகாம்
UPDATED : டிச 25, 2023 12:00 AM
ADDED : டிச 25, 2023 05:26 PM
புதுச்சேரி:
ஆச்சாரியா பொறியியல் கல்லுாரியில் நடந்த வேலை வாய்ப்பு நேர்காணலில் 43 மாணவர்களுக்கு, பணி ஆணை வழங்கப்பட்டது.வில்லியனுார் ஆச்சாரியா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் பியுங் ஹவா இந்திய நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நேர்காணல் நடந்தது. கல்லுாரி முதல்வர் குருலிங்கம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இறுதியாண்டு பயிலும் கல்லுாரி மாணவர்கள் மற்றும் ராஜிவ் காந்தி பொறியியல் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.வேலை வாய்ப்பு முகாமில் ஆச்சாரியா பொறியியல் கல்லுாரியின் 23 மாணவர்களும், ராஜிவ்காந்தி பொறியியல் கல்லுாரியின் 20 என மொத்தம் 43 பேர் தேர்வாகினர். தேர்வான மாணவர்களுக்கு பியுங் ஹவா நிறுவனத்தில் பணி புரிய ஆணை வழங்கப்பட்டது.வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடுகளை ஆச்சாரியா பொறியியல் கல்லுாரி பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு குழு தலைவர் ஆனந்த் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
