UPDATED : டிச 26, 2023 12:00 AM
ADDED : டிச 26, 2023 05:22 PM
பெங்களூரு:
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் யுவநிதி திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ஐந்து வாக்குறுதி திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதில், நான்கு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டன. ஆனால், பயனாளிகளை முழுமையாக சென்றடையவில்லை.வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாயும்; டிப்ளமா படித்தவர்களுக்கு 1,500 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கும் யுவநிதி திட்டத்தை, ஜனவரி 12ம் தேதி முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார்.இத்திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். முதல்வர், இன்று துவக்கி வைக்கிறார். இதே வேளையில், அனைத்து மாவட்ட கலெக்டர்களும் பயனாளிகளுக்கு இன்று விண்ணப்பம் வழங்கி துவக்கி வைக்கின்றனர்.இந்தாண்டு படிப்பு முடித்து, ஆறு மாதங்களாக வேலை கிடைக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம். சேவாசிந்து இணையதளத்திலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி வரை விண்ணப்பிப்பவர்கள், சரியான தகவல்கள் உள்ளனவா என்று பரிசீலிக்கப்படும். 12ம் தேதி அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக ஊக்கத்தொகை செலுத்தப்படும்.

