UPDATED : டிச 26, 2023 12:00 AM
ADDED : டிச 26, 2023 05:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு:
ஹிஜாப் மீதான தடையை திரும்ப பெறுவது குறித்து, ஆழமாக ஆராய்ந்த பின், அரசு முடிவு செய்யும், என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.இது தொடர்பாக பெங்களூரில் அவர் கூறியதாவது:
ஹிஜாப் குறித்து நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது குறித்து, முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். அனைத்து கோணங்களிலும், அலசி ஆராய்கிறோம். அதன்பின் அரசு முடிவு செய்யப்படும்.இந்த விஷயத்தை லோக்சபா தேர்தலுக்கு, அஸ்திரமாக பயன்படுத்த பா.ஜ., முயற்சிக்கிறது. ஆனால் அந்த அஸ்திரம் வேலை செய்யாது. உடைகளை தேர்வு செய்து கொள்வது, அவரவர் உரிமை. ஹிஜாப் மீதான தடையை திரும்ப பெறுவது குறித்து, நாங்கள் முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

