தமிழ் இலக்கிய மன்றம் நடத்தும் பேச்சு, கட்டுரை போட்டிக்கு அழைப்பு
தமிழ் இலக்கிய மன்றம் நடத்தும் பேச்சு, கட்டுரை போட்டிக்கு அழைப்பு
UPDATED : டிச 31, 2023 12:00 AM
ADDED : டிச 31, 2023 11:15 AM
பெரியகுளம்:
தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் திருக்குறள் போட்டி, பேச்சு போட்டிகளில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.பெரியகுளத்தில் தமிழ் இலக்கிய மன்றம் நடத்தும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் போட்டிகள் ஜன.4ல் துவங்கி ஜன. 6வரை நடக்கிறது. இலக்கிய மன்றம் அமைப்பாளர் புலவர் ராஜரத்தினம் கூறுகையில் பெரியகுளம் என். எஸ். என். ரத்தினவேலு சரஸ்வதி திருமண மண்டபத்தில் நடக்கும் போட்டியில் 1330 திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்,வள்ளுவத்திற்கு உண்டோ ஈடு, அறிவுடையார் எல்லாம் உடையார், வானம் வசப்படும், ஆகிய தலைப்புகளில் கட்டுரை போட்டியும், திருவள்ளுவரே மீண்டும் பிறந்து வா, முயற்சி திருவினையாக்கும், எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், மா மருத்துவன் வள்ளுவன், எனைத்தானும் நல்லவை கேட்க ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டிகளும் நடக்கவுள்ளது.வெற்றி பெறும் மாணவர்களுக்கும் முதல் பரிசு ரூ.ஆயிரம் முதல் பல பரிசுகள் வழங்கப்பட உள்ளது. போட்டியில் பங்கு பெறுவோர் அந்தந்த கல்வி நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைச் சான்று பெற்றுவர வேண்டும்.தங்கள் பெயர்களை புலவர் ராசரத்தினம், சர்வோதயா சங்க கதர்க்கடை, மூன்றாந்தல், தென்கரை பெரியகுளம் என்ற முகவரியிலும், அலைபேசி 97882 45428 எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்றார்.

