sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

புகைப்படங்களை இணையத்தில் பகிரக் கூடாது: மாணவர்களுக்கு எச்சரிக்கை

/

புகைப்படங்களை இணையத்தில் பகிரக் கூடாது: மாணவர்களுக்கு எச்சரிக்கை

புகைப்படங்களை இணையத்தில் பகிரக் கூடாது: மாணவர்களுக்கு எச்சரிக்கை

புகைப்படங்களை இணையத்தில் பகிரக் கூடாது: மாணவர்களுக்கு எச்சரிக்கை


UPDATED : ஜன 02, 2024 12:00 AM

ADDED : ஜன 02, 2024 11:53 AM

Google News

UPDATED : ஜன 02, 2024 12:00 AM ADDED : ஜன 02, 2024 11:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
அகில பாரதி நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கான சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. குயவர்பாளையம் லெனின் வீதியில் நடந்த முகாமிற்கு ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.முகாமில், இன்ஸ்பெக்டர் கீர்த்தி பேசியதாவது:
இன்றைய உலகம் இணையமாகிவிட்டது. இணையம் வழியாக தகவல்களை தேடும்போது, நம்முடைய அனைத்து தகவல்களும் கண்காணிக்கப்படுகிறது. நீங்கள் என்ன தேடுகிறீர்களோ, அது போன்ற விளம்பரங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.எனவே இணைய வழியை மகளிர் உபயோகப்படுத்தும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். புகைப்படங்களை இணையத்தில் பகிரக்கூடாது. தனிப்பட்ட புகைப்படங்களை எடுத்து மற்றவர்களுக்கு பகிர்வதாலும் பெரிய பிரச்னைகள் உண்டாகிறது. படங்களை திருடும் கும்பல் மார்பிங் செய்து, மிரட்டுகின்றனர்.இணைய வழியில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி அதில் பொருட்களை வாங்கினால் கட்டாயம் ஏமாற்றப்படுவீர்கள்.இணைய வழியாக பொருட்களை வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு வங்கியும் பின் நம்பரையோ அல்லது ஓ.டி.பி., எண்ணையோ கேட்க மாட்டார்கள். முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து வருகின்ற வீடியோக்களை எடுக்க கூடாது என்றார்.தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் சைபர் குற்றங்கள் தொடர்பாக மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us