sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் சங்க தேர்தல் ஏ.பி.வி.பி., வலியுறுத்தல்

மாணவர் சங்க தேர்தல் ஏ.பி.வி.பி., வலியுறுத்தல்

மாணவர் சங்க தேர்தல் ஏ.பி.வி.பி., வலியுறுத்தல்


UPDATED : ஜன 07, 2024 12:00 AM

ADDED : ஜன 08, 2024 08:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2024 12:00 AM ADDED : ஜன 08, 2024 08:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் உள்ள கல்லுாரி, பல்கலைகளில் மாணவர் சங்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பான, ஏ.பி.வி.பி., வலியுறுத்தி உள்ளது.அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தேசியச் செயலர் ஷிரவன் ராஜ், மாநிலச் செயலர் யுவராஜ் தாமோதரன் ஆகியோர் இணைந்து அளித்த பேட்டி:
ஏ.பி.வி.பி., தேசிய மாநாடு, கடந்த டிசம்பர் 7 முதல் 10ம் தேதி வரை, டில்லியில் நடந்தது. 20 நாடுகளில் இருந்து, 10,000த்துக்கும் அதிகமான மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். அந்த நாட்களில் கடும் மழை, வெள்ள பாதிப்பு இருந்தபோதும், தமிழகத்தில் இருந்து 300க்கும் அதிகமானோர் அதில் பங்கேற்றனர்.இந்த மாநாட்டில், தமிழகத்தின் கல்வி நிலையங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள கல்லுாரி, பல்கலைகளில் மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்படுவதில்லை. மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய மட்டும், தேர்தல் நடத்தினால் போதாது.கல்லுாரி, பல்கலைகளில் மாணவர் சங்கத் தேர்தல் நடத்தினால், ஜனநாயகம் முழுமை அடையும். எதிர்காலத்தில் திறன்மிக்க தலைவர்கள் கிடைப்பர். அவர்கள் முன் கூட்டியே அடையாளம் காணப்படுவர். எனவே, தமிழகத்தில் உடனே மாணவர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us