UPDATED : ஜன 08, 2024 12:00 AM
ADDED : ஜன 08, 2024 10:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:
தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்க பாலிடெக்னிக், கல்வியில் கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வு நடந்தது.தேர்வு காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மதியம் 2:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை இரு பிரிவுகளாக நடந்தது. காலை தேர்வு எழுத 237 பேருக்கும், மதியம் தேர்வு எழுத 892 பேருக்கும் என மொத்தம் 1729 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதில் காலைத் தேர்வில் 292 பேர், மதிய தேர்வில் 327 பேர் என 619 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையத்தை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டார்.