sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சிதம்பரம் நுாலகத்திற்கு ரூ.48 லட்சத்தில் கட்டடம்

/

சிதம்பரம் நுாலகத்திற்கு ரூ.48 லட்சத்தில் கட்டடம்

சிதம்பரம் நுாலகத்திற்கு ரூ.48 லட்சத்தில் கட்டடம்

சிதம்பரம் நுாலகத்திற்கு ரூ.48 லட்சத்தில் கட்டடம்


UPDATED : ஜன 15, 2024 12:00 AM

ADDED : ஜன 15, 2024 05:09 PM

Google News

UPDATED : ஜன 15, 2024 12:00 AM ADDED : ஜன 15, 2024 05:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்:
சிதம்பரத்தில் ரூ. 48 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய நுாலகத்தை, சேர்மன் செந்தில்குமார் திறந்து வைத்து, சாவியை ஒப்படைத்தார்.சிதம்பரத்தில் கடந்த 68 ஆண்டுகளுக்கு மேலாக, தனியார் கட்டடத்தில் அரசு நுாலகம் செயல்பட்டு வந்தது. குறுகிய இடத்தில் இயங்கியதால் வாசகர்கள் கடும் சிரமம் அடைந்தனர். எனவே, நவீன வசதிகளுடன் புதிய நுாலக கட்டடம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், 2014 ல் சிதம்பரம் நகராட்சி அலுவலகம் எதிரில் நுாலகம் கட்ட, நகராட்சி சார்பில் இடம் ஒதுக்கப்பட்டது. அதையடுத்து, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், சிதம்பரம் நகரமன்ற தலைவரான, செந்தில்குமார் நுாலகம் கட்ட நடவடிக்கை எடுத்தார்.நமக்கு நாமே திட்டத்தின் மூலம், 32 லட்சம் நிதி பெறப்பட்டது. அத்துடன் பொதுமக்கள் நிதியுதவி 16 லட்சம் என, மொத்தம் 48 லட்சம் ரூபாய் செலவில் புதிய நுாலக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.அதையடுத்து, புதிய கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது. நகராட்சி சேர்மன் புதிய கட்டடத்தை திறந்து வைத்து, கட்டட சாவியை நுாலகரிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் முத்து, நகராட்சி கமிஷனர் பிரபாகரன், பொறியாளர் மகராஜன், கவுன்சிலர்கள் ராஜன், மணிகண்டன், கல்பனா, லதா மற்றும் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us