sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு உத்தரவால் ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு

அரசு உத்தரவால் ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு

அரசு உத்தரவால் ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு


UPDATED : ஜன 18, 2024 12:00 AM

ADDED : ஜன 18, 2024 04:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 18, 2024 12:00 AM ADDED : ஜன 18, 2024 04:39 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:
தமிழகத்தில் தொடக்க கல்வியில் ஆசிரியர் நியமனம் முன்னுரிமை பதவி உயர்வுக்கான தகுதி ஆகியன குறித்து வெளியான அரசு உத்தரவால் (அரசாணை எண்:243ல்) இடைநிலை ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேரின் பதவி உயர்வு கேள்விக்குறியாகி உள்ளது. இது ஆளும் கட்சி மீதான ஆசிரியர்களின் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது.ஒட்டுமொத்த ஆசிரியர்களில் ஒன்றரை லட்சத்திற்கும் மேல் தொடக்ககல்வியில் உள்ளனர். ஆசிரியர்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்றால் தொடக்க கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றால் தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது.இந்நிலையில் சமீபத்தில் வெளியான அரசு உத்தரவு தொடக்க கல்வியை முடக்கும் வகையில் உள்ளது. அதாவது கல்வி ஒன்றியம் மாவட்டத்திற்குள் நடந்து பதவி உயர்வு இனிமேல் மாநில சீனியாரிட்டி அடிப்படையில் நடக்கும் என்பதும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இருந்த பதவி உயர்வில் கை வைத்தும் அந்த உத்தரவு வெளியாகியதால் மாநில அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு அரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது:
தி.மு.க. அரசு மீண்டும் வந்தபோது ஆசிரியர்கள் அரசு ஊழியர்களிடம் இருந்த எதிர்பார்ப்புகள் தற்போது தவிடு பொடியாகி விட்டன. பேச்சு வார்த்தைகள் பயனற்று போகின்றன.குறிப்பாக தொடக்க கல்வி ஆசிரியர்கள் அதிருப்தியின் உச்சத்தில் உள்ளனர்.இதுவரை தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்றனர். 20 ஆண்டுகள் நடைமுறையை உடைத்து இந்த அரசு உத்தரவில் மாற்றம் கொண்டு வந்ததால் தொடக்கக் கல்வியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி என ஒரு லட்சம் பேருக்கு பதவி உயர்வு வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.பட்டதாரி ஆசிரியர் தமிழாசிரியர் ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் ஆகியோருக்கு ஒருங்கிணைந்த முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் பதவி உயர்வு இருந்தது. தற்போது பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் மட்டும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர் என திருத்தம் செய்யப் பட்டுள்ளது.இது ஆரம்ப நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் செல்வதை தடுக்கும். இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வும் பறிக்கப்பட்டுள்ளது.நடுநிலைப் பள்ளிகளில் ஒரு காலத்தில் 1-முதல் 8 வகுப்புகள் வரை இடைநிலை ஆசிரியர்களே கற்பித்தல் பணி செய்தனர். அங்கு தலைமையாசிரியர்களாக மூத்த இடைநிலை ஆசிரியர்களே பதவி உயர்வில் நியமிக்கப்பட்டனர். நாங்கள் நேரடி பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இடைநிலை ஆசிரியருக்குப் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்க வேண்டாம் என்கிறோம். 5000 ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த ஒரு லட்சம் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிப்பது எந்த வகையில் நியாயம். இந்த உத்தரவு வெளியிடும் முன் சங்கங்களின் கருத்தை ஏன் கேட்கவில்லை.மாநில சீனியாரிட்டியால் பாதிப்பது 90 சதவீதம் ஆசிரியைகள். பதவி உயர்வை புறக்கணிக்கும் முடிவில் அனைத்து ஆசிரியர்களும் உள்ளோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us