நேதாஜியே இந்தியாவின் தேசத்தந்தை: கவர்னர் ரவி பேச்சு
நேதாஜியே இந்தியாவின் தேசத்தந்தை: கவர்னர் ரவி பேச்சு
UPDATED : ஜன 23, 2024 12:00 AM
ADDED : ஜன 23, 2024 04:54 PM
சென்னை:
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இல்லையென்றால் இந்தியா 1947ல் சுதந்திரம் அடைந்திருக்காது என்றும், அவரே நமது நாட்டின் தேசத்தந்தை எனவும் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (ஜன.,23) நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சுபாஷ் சந்திர போஸின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் கவர்னர் ரவி பேசியதாவது:
1942ம் ஆண்டுக்கு பின் மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் பலனளிக்கவில்லை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இல்லையென்றால் இந்தியா 1947ல் சுதந்திரம் அடைந்திருக்காது. நேதாஜியின் இந்திய தேசிய படை ஆங்கிலேய ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. நேதாஜியே நமது நாட்டின் தேசத்தந்தை. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும்.இந்திய தேசிய காங்கிரசின் போராட்டத்தால் வெளியேறவில்லை என பிரிட்டன் பிரதமர் அட்லி கூறியிருந்தார். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947-ம் ஆண்டு நாடு இரண்டாக பிரிந்தது. இவ்வாறு அவர் பேசினார்.