UPDATED : ஜன 23, 2024 12:00 AM
ADDED : ஜன 24, 2024 10:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:
ஜன.,29 அன்று காலை காரைக்குடி அழகப்பா பல்கலையில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. துணைவேந்தர் ஜி.ரவி வரவேற்புரை ஆற்றுகிறார்.உயர்கல்வி அமைச்சர்ராஜகண்ணப்பன் முன்னிலை வகிக்கிறார். உயர்கல்வித்துறை செயலர், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர்.விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்., ரவி முனைவர் பட்டம் முடித்த 150 பேர் உட்பட 350 பேருக்கு நேரடியாக பட்டம் மற்றும் சான்றுகளை வழங்குகிறார். பல்கலை பதிவாளர் ஏ.செந்தில்ராஜன் நன்றி கூறுகிறார்.விழாவிற்கான ஏற்பாடுகளை பல்கலை நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.