sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு புது கட்டடம்: சுகாதார துறை உத்தரவு

/

பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு புது கட்டடம்: சுகாதார துறை உத்தரவு

பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு புது கட்டடம்: சுகாதார துறை உத்தரவு

பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு புது கட்டடம்: சுகாதார துறை உத்தரவு


UPDATED : பிப் 09, 2024 12:00 AM

ADDED : பிப் 09, 2024 10:13 AM

Google News

UPDATED : பிப் 09, 2024 12:00 AM ADDED : பிப் 09, 2024 10:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
இடியும் நிலையில் உள்ள பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கான விடுதியை, புதிதாக கட்ட உத்தரவிடப்பட்டது.கோவை அரசு மருத்துவக் கல்லுாரியில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பயில்கின்றனர். மருத்துவ படிப்பு முடியும் தருவாயில், மாணவர்கள், ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி(சி.ஆர்.ஆர்.ஐ.,) பெறுவது கட்டாயம்.மருத்துவமனையிலேயே சி.ஆர்.ஆர்.ஐ., மாணவர்கள் தங்கி, பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கான விடுதி, மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டம், 1974ம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது.ஏறக்குறைய, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இவ்விடுதி, முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. இதையடுத்து, இக்கட்டம் மாணவர்கள் தங்க தகுதியற்றது என, பொதுப்பணித்துறை சான்றிதழ் அளித்தது. இதற்கு மாற்றாக, புதிய கட்டடம் கட்ட மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.தற்போது, புதிய கட்டடம் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்த, சுகாதார துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி, உடனடியாக பழைய கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட அனுமதி வழங்கினார். இதன் வாயிலாக, மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற உள்ளது.






      Dinamalar
      Follow us