UPDATED : பிப் 12, 2024 12:00 AM
ADDED : பிப் 12, 2024 09:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நாக் ஏ பிளஸ் பிளஸ் அங்கீகாரத்தை பெற்று, தன்னாட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.2012ல் செயல்படத் தொடங்கிய இக்கல்லுாரி, இணை பாடத்திட்டங்களில் புதுமையான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. முன்னதாக, தேசிய அளவில் முதல், பத்து கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், கூடுதல் பாடங்களில் புதுமையான திட்டங்களை செயல்படுத்திய, கல்லுாரியாக இடம்பிடித்துள்ளது.நீலகிரியில் உள்ள பள்ளிகளின் கல்வியை மேம்படுத்தும் வகையில், மாவட்ட கல்விக்குழுவுடன் இணைந்து, இப்பகுதி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகளை நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நடத்தி வருகிறது.