sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவர்களை மிரட்டும் மாடுகள் பிடிக்கப்படுமா?

/

மாணவர்களை மிரட்டும் மாடுகள் பிடிக்கப்படுமா?

மாணவர்களை மிரட்டும் மாடுகள் பிடிக்கப்படுமா?

மாணவர்களை மிரட்டும் மாடுகள் பிடிக்கப்படுமா?


UPDATED : பிப் 19, 2024 12:00 AM

ADDED : பிப் 19, 2024 06:58 AM

Google News

UPDATED : பிப் 19, 2024 12:00 AM ADDED : பிப் 19, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மடிப்பாக்கம்:
மடிப்பாக்கம், கண்ணகி தெருவில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.அவர்கள் பள்ளிக்கு செல்ல பிரதான வழித்தடமாக பொன்னியம்மன் கோவில் தெருவும், அருள்ஜோதி சாலையும் விளங்குகிறது. இந்நிலையில், அருள்ஜோதி சாலையில் குப்பை தொட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அதில், சேகரமாகும் குப்பை உரிய நேரத்தில் எடுப்பதில்லை.உணவு தேடி அலையும் மாடுகள் மற்றும் நாய்கள், இந்த குப்பை தொட்டிகளில் மேய்கின்றன. வாகனங்களின், ஹாரன் ஒலியால் திடீரென மிரண்டு சாலையில் ஓடும்போது, அவ்வழியே செல்லும் மாணவர்களை முட்டுகின்றன. மேலும், தெரு நாய்களும் வாகனங்களை துரத்துவதால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.உயிர்பலி ஏற்படும் முன், பள்ளியின் சுற்று வட்டார பகுதிகளில் திரியும் மாடுகளை சிறைபிடிக்க வேண்டும். மாடுகள் வருவதற்கு காரணமாக இருக்கும் குப்பை தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us