sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சுவையாக இல்லாத சத்துணவு: ருசி பார்த்து கலெக்டர் அறிவுரை

/

சுவையாக இல்லாத சத்துணவு: ருசி பார்த்து கலெக்டர் அறிவுரை

சுவையாக இல்லாத சத்துணவு: ருசி பார்த்து கலெக்டர் அறிவுரை

சுவையாக இல்லாத சத்துணவு: ருசி பார்த்து கலெக்டர் அறிவுரை


UPDATED : பிப் 23, 2024 12:00 AM

ADDED : பிப் 23, 2024 07:22 AM

Google News

UPDATED : பிப் 23, 2024 12:00 AM ADDED : பிப் 23, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:
உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் உத்திரமேரூர் ஒன்றிய ஊராட்சிகளில் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று, அரசு திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.மானாம்பதி ஊராட்சியில் நடந்த உங்கள் ஊரில் உங்கள் திட்ட முகாமில் பொதுமக்களிடம் கலெக்டர் கலைச்செல்வி மனுக்கள் பெற்றார். மானாம்பதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், மருத்துவ வசதிகள், மருந்து இருப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.அதை தொடர்ந்து, மானாம்பதி அரசு தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது, பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்குகின்ற மதிய நேர உணவை பரிசோதித்த கலெக்டர் கலைச்செல்வி, சத்துணவு சுவையானதாக இல்லை எனவும், சத்தாண உணவு வழங்கவும் ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.மேலும், அப்பள்ளி மாணவர்களின் கற்றன் திறன் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து, அம்மையப்பநல்லூர் ஊராட்சியில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் மற்றும் பணியாளரின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார்.தொடர்ந்து உத்திரமேருர் பேரூராட்சியில், 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் நவீன எரிவாயு தகனமேடை பணிகளை ஆய்வு செய்து அதன் தரம் குறித்து கேட்டறிந்தார்.இதேபோன்று, பினாயூர், குருமஞ்சேரி, அரும்புலியூர் ஆகிய ஊராட்சிகளில் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி தலைமையில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்தது. அங்கன்வாடி, இ - சேவை மையம் போன்றவற்றை ஆய்வு செய்து செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.உத்திரமேரூர் வட்டாட்சியர் கருணாகரன் மற்றும் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us